உப்பு வரி – மதுவிலக்கு குறித்து SCF தீர்மானம்
அகில இந்திய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம், புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் வீட்டில் 6.10.1951 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ்., ஜன் சங் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பிற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து முடிவெடுக்க, டாக்டர் அம்பேத்கர், என். சிவராஜ் மற்றும் பாபுசாகேப் ராஜ்போஜ் ஆகியோர் அடங்கிய…