காந்தியை பூனா பார்ப்பனர்கள் கொன்றே விடுவார்கள் – 1931 ல் பெரியார்

மராட்டா பார்ப்பனர் பூனாவில் உள்ள பார்ப்பனர்கள் உயர்திரு திலகரைப் போலவே படு வருணாஸ்ரம தர்மிகள் என்பதும் அவர்கள் பெரிதும் திரு திலகர் கொள்கைகளைப் பின்பற்றுகின்றவர்கள் என்பதும் யாவரும் அறிந்ததேயாகும். உயர்திரு காந்திக்கும், பூனா பார்ப்பனர்களுக்கும் ஒரே ஒரு விஷயத்தில்தான் முக்கியமான அபிப்பிராயபேதம் உண்டு. அது என்னவென்றால் திரு காந்தி தீண்டாமை ஒழிக்கப்படவேண்டும் என்று (வாயில் மாத்திரம்) பேசி வருவதைப் பற்றியதாகும்.அவர் காரியத்தில் ஆரம்பித்தால் திரு காந்தியை பூனா பார்ப்பனர்கள் கொன்றே விடுவார்கள். அப்படிப்பட்ட மராட்டா பார்ப்பனர்கள் இன்று…

இரத்த வெறிபிடித்த ஆர்.எஸ்.எஸ்

நெருக்கடி நிலையின்போது இந்திரா காந்தி செய்‌tத உருப்படியான காரியம்‌ ஏதாவது ஒன்று உண்டென்றால்‌, அது ஆர்‌.எஸ்‌.எஸ்‌., ஆனந்தமார்க்‌கம்‌ போன்ற மதவெறிபிடித்த இடங்கங்களுக்குத் தடை விதித்‌ததுதான்‌! உலகம்‌ போற்றி உத்தமர்‌ காந்தியின்‌ உயிர்போக்கிய கோட்சேயை வளர்த்து ஆளாக்கி விட்ட இந்த ஆர்‌.எஸ்‌. எஸ்‌. மீண்டும்‌ அலிகாரில்‌ தன்‌ கைவரிசையைக்‌ காட்டியுள்ளது. அதன்‌ விளைவாக முப்பது பேர்‌ கொல்‌லப்பட்டிருக்கிறார்கள்‌. நூற்‌றுக்‌ கணக்கானோர்‌ படுகாயமடைந்திருக்கிறார்கள்‌. ஐந்து இலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட பொருட்கள்‌ நாசமாக்கப்பட்‌டுள்ளன. செப்டம்பர் 12 ஆம் தேதி “புரா” என்றழைக்கப்பட்ட…

சுயமரியாதைக்காரர்கள் காந்தியுடன் சம்பாஷனை

பார்ப்பனீயக் கொடுமைக்கு காந்தியாரும் உட்பட்டவராம். 1316 பேர் கையெழுத்திட்ட மகஜர். காந்தியாரின் துக்கக்குறி 21-12-33 காலை 8.30 மணிக்கு தோழர் என்.ராமனாதன் அவர்களுக்கு மற்ற சுயமரியாதைத் தோழர்களும் தோழர் காந்தியார் அவர்களை தோழர் நாகேஸ்வரராவ் பந்துலு அவர்கள் வீட்டில் வைத்து பேட்டிகண்டு பேசினார்கள். பேட்டிக்கு காந்தியவர்கள் 15 நிமிஷங்களே ஒதுக்கியிருந்தாலும் 35 -நிமிஷம் வரையில் அவராகவே ருசியோடு சம்பாஷித்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். தோழர் ராமனாதன் அவர்களுடன் சென்றிருந்த தோழர்கள் : கே.எம்.பாலசுப்ரமண்யம், எஸ்.குருசாமி, குஞ்சிதம், பொன்னம்பலனார், பா.ஜீவானந்தம்,…

நீதிக்கட்சித் தலைவர்களுடன் உரையாடல்

18-9-27 ல் மன்னார்குடியிலிருந்து நாகப்பட்டினம் பாசஞ்சர் இரயிலில் மறுநாள் காலை தஞ்சாவூருக்கு அண்ணலும் அவரது குழுவினரும் வந்து சேர்த்தார்கள். ஒவ்வொரு பெரிய நகருக்கு வரும்போதும், கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக அதற்கு முந்திய இரயில் நிலையத்தின் காந்திஜி இறங்கி விடுகிறார் என்பதை அறிந்த தஞ்சை மக்கள் இன்று ஒரு தந்திரம் செய்தார்கள், மன்னார்குடியிலிருந்து தஞ்சைக்குள் டாக்ரோடு வழியாக நுழையக்கூடிய இடத்தில் கூடி நின்றார்கள்,ஆனால் இம்முறை காந்திஜி அவ்வாறு இறங்கவில்லை, திட்டப்படி தஞ்சாவூர் ரெயில் நிலையத்திலேயே வந்து இறங்கினார். மறுபடியும் பொது…

சம்பாரண் விசாரணையில் காந்தி

சம்பாரணில் அந்த நாள், என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நாள்; விவசாயிகளுக்கும்  எனக்கும் அது மிகவும் முக்கியமான நாளாகும். சட்டப்படி விசாரணைக்கு  உட்பட வேண்டியவன் நான். ஆனால், உண்மையில், குற்றவாளியின் கூண்டில் ஏறி நின்றது அரசாங்கமே என்று சொல்ல வேண்டும். என்னைப் பிடிக்க விரித்திருந்த வலையில் அரசாங்கம் சிக்கிக்கொள்ளும்படி செய்வதிலேயே கமிஷனர் வெற்றி பெற்றார். விசாரணை ஆரம்பமாயிற்று.  அரசாங்க வக்கீல், மாஜிஸ்டிரேட் முதலிய அதிகாரிகள் எல்லாம்      திகைத்துக் கொண்டிருந்தார்கள். என்ன செய்வதென்பதே  அவர்களுக்குப் புரியவில்லை. வழக்கை ஒத்தி வைத்து விடும்படி மாஜிஸ்டிரேட்டை அரசாங்க வக்கீல் வற்புறுத்திக் கொண்டிருந்தார். ஆனால், நான்  குறுக்கிட்டேன். சம்பாரணை விட்டுப்…

“Hunting the Lion”

கல்கியின் “மாந்தருக்குள் ஒரு தெய்வம்” நூலில் இருந்து …. “ஆமதாபாத் செஷன்ஸ் கோர்ட்டில் 1922-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் 18-ஆம் தேதி அந்தச் சரித்திரப் பிரசித்தி பெற்ற மாபெரும் விசாரணை நடந்தது. முப்பது கோடி மக்களின் உள்ளத்தில் குடி கொண்டிருந்த மகத்தான தலைவர் கைதிக் கூண்டிலே நின்றார். அவர் பெயர் ஸ்ரீ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அன்னிய நாட்டிலிருந்து வந்த அதிகார வர்க்கத்தின் பிரதிநிதி ஒருவர் நீதிபதியின் பீடத்தில் அமர்ந்திருந்தார். அவர் பெயர் மிஸ்டர் ஸி. என்.…

Communal Award : Corner stone of White Paper

Mahasabha justification for ignoring the latter Bhai Paramanands tilt ar Non-communalised Hindus (FREE PRESS OF INDIA) CALCUTTA, Jan. 19. “The Communal Award has been Imposed upon us by the arbitrary wish of the Secretary of State merely for the purpose of satisfying the. Moslem community in order to secure their friendship ‘and co-operation. There Is,…

1931 ஆம் ஆண்டு (மார்ச் 26-31) காங்கிரஸ் மகாநாட்டில் பகத்சிங்கின் தந்தை சர்தார் கிஷன்சிங் ஆற்றிய உரை

(பகத்சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ் தூக்கிலிடப்பட்டதற்குப் பிறகு நடைபெற்ற இந்த மாநாட்டில் ராஜகுருவின் தாயும் அழைக்கப்பட்டிருந்தார். அவர் மேடையில் வீற்றிருக்க சர்தார் கிஷன்சிங் உரையாற்றினார்) ராஜகுருவின் அன்னை இங்கு வீற்றிருக்கிறார்கள். இவருக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நான் இந்த அன்னைக்கு தலை வணங்குகிறேன். தலைவர் அவர்களே ! சகோதர சகோதரிகளே ! சற்று நேரத்துக்கு முன்பு உங்களுக்கு முன்னால் என்பால் காட்டிய அன்புக்கும் பரிவுக்கும் நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தீர்மானம் பற்றி…

காந்திப் பசு – பாரதி

தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நியாயத்தை எடுத்துரைக்க 1909-ல் லண்டன் சென்ற பாரிஸ்டர் காந்தியின் பயணம் தோல்வியில் முடிந்தது. திரும்பிச் சென்றால் கைது செய்யப்படுவது நிச்சயம் என்ற நிலைமை புரிந்த மற்ற தலைவர்கள் வெளியே இருந்து கொண்டே போராட்டத்தைத் தொடர எண்ணி தலைமறைவாகி விட்டனர், காந்திஜியோ தென்னாப்பிரிக்கா திரும்பினார். எதிர்பார்த்தபடி அவரைக் கைது செய்து சிறையிலிட்டது தென்னாப்பிரிக்க அரசு. இது பற்றி தமது இந்தியா வார இதழில் பாரதி ஒரு கேலிச்சித்திரம் வெளிட்டு அதனடியில் பின் வரும் குறிப்பையும் பிரசுரித்தார்…

ஒரு கோடி ரூபாய் (திலகர் சுயராஜ்ய நிதி)

காளிதாஸன் (பாரதியாரின் புனைப்பெயர்) 11 ஆகஸ்டு 1921 , துன்மதி ஆடி 27 ஸெப்டம்பர் மாஸத்துக்குள் ஸ்வராஜ்யம் கிடைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் இன்றியமையாத தென்றும், அது கொடுக்காவிட்டால் இந்திய தேசத்து ஜனங்கள் ஸ்வராஜ்யத்தில் விருப்பமில்லாத தேசத் துரோகிகளே யாவார்களென்றும் ஶ்ரீமான் காந்தி முதலியவர்கள் சொல்லிக்கொண்டு வந்தனர். ஜனங்கள் ஒரு கோடி ரூபாய் கொடுத்து விட்டார்கள், அந்தத் தொகை எங்ஙனம் செலவிடப்படுகிறது? எப்போது செலவு தொடங்கப் போகிறார்கள்? ஒரு மாஸத்திலோ, இரண்டு மாஸங்களிலோ, அன்றி இன்னும் ஒரு…