பூனா வெடிகுண்டு – நாமக்கல் கவிஞர்
விந்தையில் விந்தை! காந்தியின் மேலும் வெடிகுண்டை யாரோ வீசினராம்! ஹிந்தும தத்தில் வந்தவர் யாரும் இப்படி யும்செய ஒப்புவரோ! நிந்தையில் நிந்தை இதைவிட வேறும் இந்திய நாட்டிற்கு வந்திடுமோ! இந்தவி பத்தில் காந்தியைக் காத்தது எந்தப் பொருளதைச் சிந்தை செய்வோம். சத்தியம் மெய்யே, சாந்தமும் மெய்யே சாதித் துயர்ந்திட்ட சாதுக்கள்மெய் நித்தமும் நின்று நம்மை நிறுத்து நீதி செலுத்திடும் ஜோதியும்மெய் பொய்த்திடும் பொய்யே போனது ஐயம் புண்ணியம் என்பதும் உண்மைஅதை உத்தமர் காந்தியின் மெய்த்தவ வாழ்வினில் உண்டு…