ஒரு கோடி ரூபாய் (திலகர் சுயராஜ்ய நிதி)
காளிதாஸன் (பாரதியாரின் புனைப்பெயர்) 11 ஆகஸ்டு 1921 , துன்மதி ஆடி 27 ஸெப்டம்பர் மாஸத்துக்குள் ஸ்வராஜ்யம் கிடைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் இன்றியமையாத தென்றும், அது கொடுக்காவிட்டால் இந்திய தேசத்து ஜனங்கள் ஸ்வராஜ்யத்தில் விருப்பமில்லாத தேசத் துரோகிகளே யாவார்களென்றும் ஶ்ரீமான் காந்தி முதலியவர்கள் சொல்லிக்கொண்டு வந்தனர். ஜனங்கள் ஒரு கோடி ரூபாய் கொடுத்து விட்டார்கள், அந்தத் தொகை எங்ஙனம் செலவிடப்படுகிறது? எப்போது செலவு தொடங்கப் போகிறார்கள்? ஒரு மாஸத்திலோ, இரண்டு மாஸங்களிலோ, அன்றி இன்னும் ஒரு…