கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது – அண்ணா
கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது! கோடு, குன்றம் இரண்டும் ஓரேபொருளைக் குறிக்கும் சொற்களன்றோ என்பர் அன்பர், உண்மை. அதுபோலவே இங்கு நாம் விளக்க எடுத்துக் கொண்ட பிரச்னை சம்பந்தப்பட்டமட்டில், உயர்ந்தது தாழ்ந்தது என்னும் இருசொற்களுமம் கூர்ந்து நோக்கும்போது, ஒரே பொருளையே தருவதும் விளங்கும். எந்தப் பிரச்சனை? எந்தக் கோடு? எந்தக் குன்றம்? அச்சாரியார் பிரச்சனை! திருச்செங்கோடு! திருப்பரங்குன்றம்! இவையே சிலபல திங்களாக வீடு, நாடு, மன்றமெங்கும் பேசப்பட்டவை. இப்போது திருச்செங்கோடு தேர்தல் செல்லுபடியாகக் கூடியதே என்று…