காந்தியாரின் படத்தைக் கொளுத்துவேன், அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன் என்ற பெரியாருக்காக … அண்ணா
காந்தியார் பெரியாரின் மாளிகையிலே தங்கியிருந்திருக்கிறார் ; காந்தியின் நினைவாக தன் தமக்கையின் பெண்ணுக்கு ‘காந்தி’ என்றே பெயர் வைத்திருக்கிறார் பெரியார். காந்தியாரின் படத்தைக் கொளுத்துவேன், அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன் என்று பெரியார் (ஈ.வெ.ரா.) சொன்னாரென்றால் அவருக்கு அவைகளின்பேரில் இருக்கிற வெறுப்பினால் அல்ல! தேசியக் கொடிக்கு-தேசியச் சட்டத்திற்கு இழுக்கை உண்டாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அல்ல; ‘இவைகளை எந்தக் காரணத்திற்காக கொளுத்தச் சொல்லுகிறேன்; கிழிக்கச் சொல்லுகிறேன்’ என அவர் எடுத்துச் சொல்லுகிறாரோ அந்தக் குறைபாடுகளையெல்லாம் நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சி…