அவர்(காந்தி) காட்டிய வழி! – அண்ணா
அவர் காட்டிய வழி! தன் நலங் கருதாது பொதுத் தொண்டு புரிந்ததன் காரணமாக உலக உத்தமர் என்ற உயரிய நிலையைப் பெற்ற காந்தியார் மறைந்து ஓர் ஆண்டு நிறைந்து, அவருடைய நினைவின் அறி குறியாக நாடெங்கும், ஏன், உலகமெங்குமே அவருடைய உழைப்புக்கும் தியாகத்திற்கும் நன்றி செலுத்தும் முறையில் அனைவரும் அவருக்கு வணக்கமும் மரியாதையையும் செலுத்தினார். காந்தியார் மறைந்தாலும் அவர் வகுத்த கொள்கைகளும் திட்டங்களும் நம்முன் இருக்கின்றன என்றும், ஆவற்றை நடைமுறையில் கொண்டு வருவதே நம்முடைய நீங்காக் கடமையாக…