நீதிக்கட்சித் தலைவர்களுடன் உரையாடல்
18-9-27 ல் மன்னார்குடியிலிருந்து நாகப்பட்டினம் பாசஞ்சர் இரயிலில் மறுநாள் காலை தஞ்சாவூருக்கு அண்ணலும் அவரது குழுவினரும் வந்து சேர்த்தார்கள். ஒவ்வொரு பெரிய நகருக்கு வரும்போதும், கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக அதற்கு முந்திய இரயில் நிலையத்தின் காந்திஜி இறங்கி விடுகிறார் என்பதை அறிந்த தஞ்சை மக்கள் இன்று ஒரு தந்திரம் செய்தார்கள், மன்னார்குடியிலிருந்து தஞ்சைக்குள் டாக்ரோடு வழியாக நுழையக்கூடிய இடத்தில் கூடி நின்றார்கள்,ஆனால் இம்முறை காந்திஜி அவ்வாறு இறங்கவில்லை, திட்டப்படி தஞ்சாவூர் ரெயில் நிலையத்திலேயே வந்து இறங்கினார். மறுபடியும் பொது…