மதுரை தந்த மாணிக்கம் – III
ஆலயப்பிரவேசம் ஹரிஜனங்களை சமுதாயத்தில் சரி சமானமான ஜனங்களாக ஆக்கிட வேண்டுமென்ற உள்ளுணர்வு ஆசை அய்யருக்கு வளர்பிறையாக வளர்ந்து கொண்டிருந்தது. தேசவிடுதலைப் போருக்கு அவர் எடுத்துக் கொண்ட சிரமத்தையும் அக்கறையையும் விட ஹரிஜன சேவைக்குத்தான் அதிகம் உழைப்பையும் பணத்தையும், காலத்தையும் செலவிட்டார். மதுரையில் அய்யரைப் போலவே, மதுரை காந்தி என்று அழைக்கப்பட்ட என்.எம்.ஆர். சுப்புராமன் அவர்களும் விளங்கினார். இருவரும் சேர்ந்து என் போன்ற தொண்டர்களுடன் ஹரிஜன சேவையில் முழு மூச்சுடன் இறங்கினர். நாடு விடுதலை அடையும். அது அடைகிறபோது…