ஒத்துழையாமை இயக்கம் குறித்து பாரதி
சுதேசமித்திரன் பத்திரிகையும் தமிழ் நாடும் – ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி 30 நவம்பர் 1920 ரௌத்திரி கார்த்திகை 16 வடக்கே, ஸ்ரீ காசியினின்றும், தெற்கே தென் காசியினின்றும், இரண்டு தினங்களின் முன்னே, இரண்டு கடிதங்கள் என் கையில் சேர்ந்து கிடைத்தன,’ அவை யிரண்டும் சிறந்த நண்பர்களால் எழுதப்பட்டன. அவற்றுள் ஒன்று “பஹிரங்கக் கடிதம்” மற்றது ஸாதாரணக் கடிதம். ஆனால் இரண்டிலும் ஒரே விஷயந்தான் எழுதப்பட்டிருக்கிறது; ஒரே விதமான கேள்விதான் கேட்கப் பட்டிருக்கிறது. அதே கேள்வியைச் சென்னையிலுள்ள…